ஸ்ரீ விஷ்வரூப பாலமுருகன் பத்திரிகை

ஸ்ரீ விஷ்வரூப பாலமுருகன்

திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி வட்டம்,ஏம்பலம்,மீசநல்லூர்,மாம்பட்டு,தெள்ளார்,தென் வணக்கம்பாடி,நடுகுப்பம் இதன் மத்தியில் ஆரூர் சிவன் மலை குன்றில் அமைய உள்ள

ஸ்ரீ விஷ்வரூப பாலமுருகன் திருவுருவம் அமைக்க

அன்புடையீர்.!

ஆரூர்  ஸ்ரீ பாலமுருகன் ஆலையம் ,விரோதிகிருது வருடம் தை மாதம் 13 –ம்தேதிதை பூச திருநாளில் (27.01.1971) பிரிதிஷ்டை செய்யப்பட்டு 45 ஆண்டுகளாக வணங்கப்பட்டு வருகின்ற ஆலையத்தில் ஸ்ரீ பாலமுருகன் திருவாக்குபடி ஆலையத்தின் அருகே உலகிலேயே வேறு எங்கும் அமைந்திடாத ஸ்ரீ விஸ்வருப பாலமுருகன் கற்சிலை 6  முகம், 12 கரங்களைக் கொண்ட 12 அடி உயரமுடைய பிரம்மாண்ட கற்சிலை அமைக்கப்பட உள்ளது.
திருவுருவ வரலாறு:
அசுரனை வதைபதைற்கு முன்பு சிறையில் அடைபட்டு துன்பப்பட்ட தேவர்களுக்கு,அசுரனை கொன்று,தேவர்களை காக்க தம்மால் முடியும் என்ற நம்பிக்கை தேவர்களுக்கு கொடுக்க விஸ்வருபம் எடுத்த காட்சியளித்த பால முருகனின் திருவுருவம் மிகவும் சிறப்புவாய்ந்தது
திருவுருவ சிலையின் சிறப்புகள்
உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,வேள்விகளைக் காக்க ஒரு முகம், உபதேசம் புரிய ஒரு முகம், தீயோரை அழிக்க ஒரு முகம்,பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம் என ஆறு முகங்களையும்,பன்னிரண்டு கரங்களையும் உடைய விஸ்வருப பால முருகனின் ஆறு முகங்கத்தையும் பக்தர்கள் சுற்றி வந்து தரிசிக்க ஏதுவாக திருவுருவச்சிலை இவ்விடத்தில் அமைய உள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பு.


      இத்தகைய பல சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் திருவுருவ சிலை அமைக்கும் பணிக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை அளித்து ,இத்திருவுருவ கற்சிலை அமைய ஓர் அங்கமாக இரூந்து ஸ்ரீ விஸ்வருப பாலமுருகரின் நல்லாசி பெறுமாறு வேண்டி விரும்பிகேட்டுக்கொள்கிரோம்.  http://vishwaroopabalamurugan.blogspot.in/


First