
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார். இவரது இயற்பெயர் கீரன் என்பதாம். நெடுநல்வாடையை இயற்றியவரும் இவரே. இந்நூல் ஆற்றுப்படுத்தப்படுவர்கள் பெயரைச் சார்ந்து வழங்காமல் பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார்ந்து விளங்குகிறது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான். இந் நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நூல்
1. திருப்பரங்குன்றம்
குமரவேளின் பெருமை
தெய்வயானையின் கணவன்
தெய்வயானையின் கணவன்
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . |
5
|
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்
|
|
கடப்பமாலை புரளும் மார்பினன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து |
10
|
உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்
|
|
சூரர மகளிரின் இயல்பு
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி, கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள், கோபத் தன்ன தோயாப் பூந்துகில், |
15
|
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்,
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின், நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை, சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி, துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் |
20
|
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் |
25
|
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக் கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு . . . இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக |
30
|
வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் |
35
|
வேங்கை நுண்டாது அப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் 'கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரி'ெதன்று ஏத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி |
40
|
சூரர மகளிர் ஆடும் சோலை
|
|
காந்தளின் கண்ணி சூடிய சென்னியன்
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் |
|
முருகன் சூரனைத் தடிந்த வகை
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
|
45
|
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
|
|
பேய்மகளின் துணங்கைக் கூத்து
உலறிய கதுப்பின் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு |
50
|
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற் கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா |
55
|
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க
|
|
மாமரத்தை வெட்டிய வெற்றி
இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து |
60
|
எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
|
|
ஆற்றுப்படுத்தல்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும் செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப |
65
|
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
|
|
திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல்
செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயில் திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து |
70
|
மாடமலி மறுகின் கூடற் குடவயின் இருஞ்சேற்று
அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் |
75
|
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன். அதாஅன்று |
|
2. திருச்சீர் அலைவாய்
ஆறுமுகன் யானையின்மேல் ஏறி வருதல்
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக். |
80
|
கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு |
|
ஆறு முகங்களின் இயல்புகள்
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப |
85
|
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார் மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே. |
90
|
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம், ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம், மந்திர விதியின் மரபுளி வழாஅ |
95
|
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம், செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம். |
100
|
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே. ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின் |
|
பன்னிரு கைகளின் தொழில்கள்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு |
105
|
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை; நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை; அங்குசங் கடாவ ஒருகை,இருகை |
110
|
ஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்ப,
ஒருகை மார்பொடு விளங்க ஒருகை ஒருகை தாரொடு பொலிய, ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப, ஒருகை பாடின் படுமணி இரட்ட, ஒருகை |
115
|
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய,
ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட, ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற |
|
அலைவாயில் ஆறுமுகன் வந்தருளியிருக்கும் காட்சி
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல |
120
|
உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ, விசும்பஆ றாக விரைசெலல் முன்னி, உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று |
125
|
3. திருவாவினன்குடி
முன் செல்லும் முனிவரது இயல்புகள்
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசுஅற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். |
130
|
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை |
135
|
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புக |
|
பாடுவார் இயல்பு
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின். |
140
|
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர |
|
பாடும் மகளிர் இயல்பு
நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் |
145
|
பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க |
|
திருமால், சிவன், இந்திரன், ஆகியோரின் இயல்புகள்
கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் |
150
|
புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும், நூற்றுப்பத்துஅடுக்கியநாட்டத்துநூறுபல் |
155
|
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், |
|
பிரமனுக்காகத் திரண்டு வந்த தேவர்கள்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
.
|
160
|
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவ ராக ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர |
165
|
பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் |
|
தேவர்கள் வருகின்ற காட்சி
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் |
170
|
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் |
|
முருகன் மடந்தையோடு வீற்றிருத்தல்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
|
175
|
ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று,
|
|
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon